அண்ணாநகர்: அமைந்தகரை வெள்ளாளர் தெருவை சேர்ந்தவர் கமலக்கண்ணன், கார் டிரைவர். இவரது மனைவி ஜெயந்தி (44). இவர்களது மகள் மோனிகா (23), கல்லூரி படிப்பை முடித்து, சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். நேற்று காலை கமலக்கண்ணன் வழக்கம்போல் வேலைக்கு சென்றார். ஜெயந்தி, மோனிகா ஆகியோர் வீட்டின் மாடியில் உள்ள அறையில் இருந்தனர். சுமார் 11.30 மணிக்கு மர்ம நபர்கள் 2 பேர், அந்த அறைக்குள் நுழைந்து தாய், மகள் இருவரையும் சரமாரியாக அரிவாளால் வெட்டினர். இதில், பலத்த காயமடைந்த ஜெயந்தி ரத்த வெள்ளத்தில் சரிந்தார். மோனிகா பலத்த காயங்களுடன் அலறி துடித்தார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். இதை பார்த்து மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பினர். அவர்களை பொதுமக்கள் விரட்டி பிடிக்க முயன்றபோது, இருவரும் அரிவாளை காட்டி மிரட்டியபடி அங்கிருந்து தப்பினர்.