வாஷிங்டன்: கிரீன் கார்டுக்கு டிரம்ப் நிர்வாகம் விதித்த தடையை நீக்கி உத்தரவிட்டுள்ளார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன். எச்1பி விசாவின் மூலம் அமெரிக்காவில் பணியாற்றுகிறவர்கள், அங்கு நிரந்தரமாக வசிப்பதற்கான சட்ட அங்கீகாரமாக க்ரீன் கார்டு வழங்கப்படுகிறது. கொரோனா ஊரடங்கின்போது பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்த முன்னாள் அதிபர் டிரம்ப், அமெரிக்கர்களின் வேலை வாய்ப்புகளை பிற நாட்டவர்கள் அபகரிப்பதாகக் கருதினார்.