இன்று நடைபெற்ற 12-ம் வகுப்பு ஆங்கில பாடத்தேர்விற்கு 49 ஆயிரம் மாணவர்கள் ஆப்சென்ட்

சென்னை: இன்று நடைபெற்ற 12-ம் வகுப்பு ஆங்கில பாடத்தேர்விற்கு 49 ஆயிரம் மாணவர்கள் தேர்வுக்குவரவில்லை.முதல்நாள் தேர்வுக்கு வராத மாணவர்கள் இன்றைய தேர்வுக்கும் வரவில்லை என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் (13 மார்ச்) 12-ம் வகுப்பு பொது தேர்வு தொடங்கியது. முதல் தமிழ் மொழி தாள் தேர்வு நடைபெற்றது. அந்த தேர்வில் 49,500 பேர் தேர்வுக்கு வரவில்லை என தகவல் வெளியானது. இந்நிலையில் ஆங்கில பாடத்தேர்வு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்றது. இந்த தேர்விலும் தமிழ் பட தேர்வுக்கு வராத மாணவர்கள் வரவில்லை என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள் ஆவர். இவர்கள் 11-ம் வகுப்பில் தோல்வியடைந்த பாட தேர்வுகளையும், அதேபோல் 12 வகுப்பு பாட தேர்வுகளையும் சேர்த்து செலுத்த வேண்டியுள்ளது.மேலும் இந்த மாணவர்களில் பெருபாலானோர் பள்ளிகளுக்கே வராத சூழலில் தேர்வில் தேர்ச்சி பெற முடியாது என்பதால் இவர்கள் தேர்வில் பங்கேற்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. வரக்கூடிய முக்கிய பாட தேர்வுகளில் பங்கேற்பாளர்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. …

The post இன்று நடைபெற்ற 12-ம் வகுப்பு ஆங்கில பாடத்தேர்விற்கு 49 ஆயிரம் மாணவர்கள் ஆப்சென்ட் appeared first on Dinakaran.

Related Stories: