சாரண, சாரணியர் இயக்கத்தின் சார்பில் சகோதரத்துவ நாள் விழா கொண்டாட்டம்

ஜெயங்கொண்டம் : உடையார்பாளையம் கல்வி மாவட்டம் சாரண சாரணிய இயக்கத்தின் சார்பில் சகோதரத்துவ நாள் விழா கொண்டாடப்பட்டது.

சாரண சாரணிய இயக்கத்தை உருவாக்கிய பேடன் பவல் மற்றும் லேடி பேடன் பவல் ஆகியோரின் பிறந்தநாள் தினத்தை உலக சகோதரத்துவ தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

உடையார்பாளையம் கல்வி மாவட்ட சாரண சாரணிய இயக்கத்தின் சார்பில் ஜெயங்கொண்டத்தில் கொண்டாடப்பட்டது. உடையார்பாளையம் கல்வி மாவட்ட சாரண சாரணிய இயக்கத்தின் செயலாளர் பாண்டியன் முன்னிலை வகித்தார். பள்ளி துணை ஆய்வாளர் செல்வகுமார் சிறப்புரையாற்றி சிறப்பாக செயல்பட்ட ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கு பாராட்டு மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார்.நிகழ்ச்சியில் பேடன் பவுல் உருவப்படத்திற்கு சாரண மாணவ மாணவியர் மற்றும் ஆசிரியர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

Related Stories: