திருவாடானையில் மாட்டு வண்டி பந்தயம்

திருவாடானை : திருவாடானையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி மாட்டுவண்டி பந்தயம் நடந்தது. தொண்டி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சந்தைப்பேட்டை பகுதியில் இருந்து தினையத்தூர் வரை எல்கை நிர்ணயம் செய்து பந்தயம் நடைபெற்றது. இந்த பந்தயத்தை முன்னாள் எம்பி அன்வர் ராஜா கொடியசைத்து துவக்கி வைத்தார். நடுநாடு ஜோடியில் 21 ஜோடிகளும், இரண்டாவதாக நடந்த பூஞ்சிட்டு 20ஜோடிகளும் பந்தயத்தில் கலந்துகொண்டன. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் மாவட்ட செயலாளர் ஆணிமுத்து, ஒன்றிய செயலாளர் மதிவாணன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related Stories: