திண்டுக்கல்: திண்டுக்கல்லில் நடந்த கல்லூரி விழாவில் நீட் தேர்வு கடினமென கூறிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், கலெக்டர் விஜயலட்சுமியை ஜெயலட்சுமி என கூறி பார்வையாளர்களை மிரள வைத்தார். திண்டுக்கல்லில் உள்ள தனியார் கல்லூரியில், நேற்று நடந்த விழாவில் பங்கேற்ற அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசுகையில், ‘‘நீட் தேர்வு மிகவும் கடினம். அதனால் மாணவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது’’ என்றார். மேலும், கலெக்டர் விஜயலட்சுமியை ஜெயலட்சுமி என்று பெயர் மாற்றிக் கூறினார். கலெக்டர் பெயரை மாற்றி கூறியதால் பார்வையாளர்கள் அதிர்ச்சியடைந்தனர்.