Normal அபராதம் வேண்டாபா: Special அபராதம் வேணும்: பெருவில் விதிமுறையை மீறிய இளம் பெண்ணிடம் முத்தம் பெற்ற காவல்துறை அதிகாரி சஸ்பெண்ட்.!!!

பெரு: பெரு நாட்டில் கொரோனா விதிமுறையை மீறிய இளம் பெண்ணிடம் அபராதம் வசூலிக்காமல் முத்தம் பெற்ற காவல்துறை அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.  உலக நாடுகள் கொரோனா பரவலை தடுக்க பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பாதுகாப்பு விதியை மீறுபவர்கள் மீது காவல்துறையினர் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

மற்ற நாடுகளை போன்று தென்அமெரிக்க நாடான பெருவில் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு பிறபிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, ஊரடங்கு அமலில் இருந்த போது பெரு நாட்டின் தலைநகரான லிமாவில் இளம்பெண் ஒருவர் காரில் சென்றுள்ளார். தொடர்ந்து, இளம்பெண்ணை வழிமறித்த காவல்துறை அதிகாரி கொரோனா விதிமீறியை மீறியதாக அவர் மீது அபராதம் விதிக்க முயன்றுள்ளார்.

ஆனால், அந்த இளம்பெண் அபராதம் வசூலிக்க வேண்டாம் என்று அதிகாரியிடம் கோரியுள்ளார். ஆனால், காவல் அதிகாரி இளம்பெண்ணை விட்டாமல், ரசீது கொடுக்காமல் தனிப்பட்ட முறையில் சிறப்பு அபராதம் வசூலித்துள்ளார். சிறப்பு அபராதமாக

பெண்ணிடம் காவல் அதிகாரி முத்தம் கேட்டு வாங்கி உள்ளார். ஆனால், பெண்ணிடம் காவல் அதிகாரி (முத்தம்)சிறப்பு அபராதம் வாங்கியதை அருகில் இருந்த கட்டிடத்தில் இருந்த ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய காவல் அதிகாரி தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

Related Stories: