சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து பலி எண்ணிக்கை 21 ஆக உயர்ந்தது

சாத்தூர்:  விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே அச்சன்குளத்தில் பிப். 12ம் தேதி பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது.  இதில் 19 பேர் உயிரிழந்தனர். 30க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வனராஜா இறந்ததையடுத்து பலி எண்ணிக்கை 20 ஆனது.  இந்நிலையில், மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த படந்தால் கிராமத்தை சேர்ந்த வைஜெயந்திமாலா (37) சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார்.

இதையடுத்து பலி எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது.

Related Stories: