வத்திராயிருப்பு அருகே ஒன்றரை டன் ரேஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல்

வத்திராயிருப்பு : வத்திராயிருப்பு அருகே மகாராஜபுரம் நடுத்தெருவில் டி.கல்லுப்பட்டியைச்  சேர்ந்த இரண்டு பேர் அந்த தெருவில் உள்ள வீடுகளில் ரேஷன் அரிசி வாங்கியுள்ளனர். வத்திராயிருப்பு அருகே மகராஜாபுரத்தில் உள்ள பெருமாள் கோயில் பகுதியில் 33 சிப்பம் (ஒன்றறை டன்) ரேஷன் அரிசி இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், திருவில்லிப்புத்தூர் வட்ட வழங்கல் அலுவலர் கோதண்டராமன், வத்திராயிருப்பு வட்ட வழங்கல்  ஆர்ஐ மதியழகன் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர். அப்போது டி.கல்லுப்பட்டியைச் சேர்ந்த இருவர் தெருவில் உள்ள வீடுகளில் அரிசியை வாங்கியது தெரிய வந்தது.

இதையடுத்து  அந்த பகுதியில் ஒவ்வொரு இடங்களிலும்  இருந்த  மொத்தம் 33 ேரஷன் அரிசி சிப்பங்களை பறிமுதல்  செய்தனர். அவற்றை திருவில்லிப்புத்தூரில் உள்ள நுகர்பொருள் வாணிப கழகத்தில் ஒப்படைத்தனர். ரேஷன் அரிசியை மாட்டு தீவனத்திற்காக வாங்கிய கல்லுப்பட்டியை சேர்ந்த நபர்கள் யார் என விசாரித்து வருகின்றனர். கடந்த சில நாட்கள் முன்பு இதே ஊாில் வேறொரு தெருவில் ரேஷன் அரிசி சிப்பங்கள் கைப்பற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories: