வத்திராயிருப்பு : வத்திராயிருப்பு அருகே மகாராஜபுரம் நடுத்தெருவில் டி.கல்லுப்பட்டியைச் சேர்ந்த இரண்டு பேர் அந்த தெருவில் உள்ள வீடுகளில் ரேஷன் அரிசி வாங்கியுள்ளனர். வத்திராயிருப்பு அருகே மகராஜாபுரத்தில் உள்ள பெருமாள் கோயில் பகுதியில் 33 சிப்பம் (ஒன்றறை டன்) ரேஷன் அரிசி இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், திருவில்லிப்புத்தூர் வட்ட வழங்கல் அலுவலர் கோதண்டராமன், வத்திராயிருப்பு வட்ட வழங்கல் ஆர்ஐ மதியழகன் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர். அப்போது டி.கல்லுப்பட்டியைச் சேர்ந்த இருவர் தெருவில் உள்ள வீடுகளில் அரிசியை வாங்கியது தெரிய வந்தது.