புதுச்சேரி: புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனை எதிர்க்கட்சிகள் சந்தித்த நிலையில் தற்போது அம்மாநில முதல்வர் நாராயணசாமி சந்தித்தார். 4 எம்.எல்.ஏ க்கள் ராஜினாமா செய்ததால் எதிர்க்கட்சியினர் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட கோரியிருந்த நிலையில் புதுச்சேரி துணைநிலை ஆளுநரை நாராயணசாமி சந்தித்துள்ளார்.