செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே அம்மா மினி கிளினிக் திறப்பு விழாவில் பாம்பு கடி, நாய் கடி, பேய் கடி என எல்லா கடிக்கும் அம்மா மினி கிளினிக்கில் மருந்து கிடைக்கும் என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பேசியிருப்பது சிரிப்பலைகளை உண்டாக்கியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தண்டரை, கடலூர், கொடூர் பெரும்பாக்கம் ஆகிய 4 கிராமங்களில் அம்மா மினி கிளினிக்குகளை தொல்லியல்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் திறந்து வைத்தார். பெரும்பாக்கத்தில் பேசிய அமைச்சர், ஒரு ஊருக்கு பள்ளிக்கூடம், கோவில் எவ்வளவு முக்கியமானதோ அதேபோல் மருத்துவமனை இருக்க வேண்டியதும் மிகமிக அவசியமானது என்று தெரிவித்தார்.