வீட்டுக்குள் புகுந்த ஆறடி நாகம்

தங்கவயல்: தங்கவயலில் வீட்டுக்குள் புகுந்த ஆறடி நீள நாக பாம்பை பாம்பு பிடி வீரர் பிடித்து காட்டுக்குள் விடுவித்தார். தங்கவயல் சின்னகோட்டை ரயில் நிலையத்தின் பின் புறம், ரகு என்ற தையல்காரர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று காலை இவரது வீட்டு காம்பவுண்டுக்குள் நாக பாம்பு புகுந்தது.

அங்கிருந்த ஒரு எலி வலைக்குள் புகுந்து கொண்டது. இது குறித்து உடனே பாம்புகளை பிடிப்பதில் வல்லவரான ஸ்னேக் ராஜனுக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த அவர், பாம்புகளை பிடிக்கும் நீளமான கம்பியை கொண்டு எலி‌வலையில் பதுங்கி இருந்த ஆறடி நீள நல்ல பாம்பை பிடித்தார். பின்னர் வழக்கம் போல் பாம்பை அருகில் உள்ள காட்டு பகுதிக்கு எடுத்து சென்று விடுவித்தார்.

Related Stories: