மைசூரு: வேட்டைக்காக காத்துக்கொண்டு சாலையில் அமர்ந்திருந்த சிறுத்தையிடம் சிக்காமல் கண் இமைக்கும் நேரத்தில் மான் ஒன்று தப்பியோடிய வீடியோ ஒன்று சமூகவலைதளத்தில் வைரலாகியுள்ளது. மைசூரு மாவட்டம் நாகரஹொலே தேசிய வனவிலங்கு பூங்கா பகுதியில் உள்ள கபினி நீர்த்தேக்க பகுதியில் வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக சிறுத்தை ஒன்று சாலையில் அமர்ந்தபடி காத்திருந்தது.