வத்திராயிருப்பில் மாதக்கணக்கில் எரியாத தெருவிளக்குகள்

வத்திராயிருப்பு : வத்திராயிருப்பிலிருந்து மகாராஜபுரம் செல்லும் சாலைப்பகுதியில் தமிழ்நாடு கிராம வங்கி உள்ளது. இப்பகுதியில் குடியிருப்பு வீடுகள் மற்றும் கடைகள் உள்ளன. இந்நிலையில், வங்கி முன்புள்ள தெருவிளக்கும், அதன் அருகில் உள்ள தெருவிளக்கும் மாதக் கணக்கில் எரியாமல் உள்ளது. இதனால், அப்பகுதி குடியிருப்புவாசிகள் திருட்டு அச்சத்தில் உள்ளனர்.

எனவே, இரண்டு தெருவிளக்குகளையும் எரிய வைக்க, பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதேபோல, 18 வார்டில் எத்தனை தெருவிளக்குகள் எரிகின்றன? எத்தனை விளக்குகள் தெரியவில்லை என சம்மந்தப்பட்ட பேரூராட்சி நிர்வாக அதிகாரி ஆய்வு செய்து, எரியாத தெரு விளக்குகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: