வத்திராயிருப்பு : வத்திராயிருப்பிலிருந்து மகாராஜபுரம் செல்லும் சாலைப்பகுதியில் தமிழ்நாடு கிராம வங்கி உள்ளது. இப்பகுதியில் குடியிருப்பு வீடுகள் மற்றும் கடைகள் உள்ளன. இந்நிலையில், வங்கி முன்புள்ள தெருவிளக்கும், அதன் அருகில் உள்ள தெருவிளக்கும் மாதக் கணக்கில் எரியாமல் உள்ளது. இதனால், அப்பகுதி குடியிருப்புவாசிகள் திருட்டு அச்சத்தில் உள்ளனர்.