டெல்லி: இந்திய பெருங்கடல் பகுதியில் ஈரான் மற்றும் ரஷ்யா கூட்டு கடற்படை பயிற்சியில் இந்தியாவும் இணைந்துள்ளது.இந்திய பெருங்கடல் பகுதியின் வடபகுதியில் ரஷ்யா மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் கடற்படை பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. 2 நாட்கள் பயிற்சியானது நேற்று தொடங்கியது. இதில், ஈரான் நாட்டு கப்பல்கள் பங்கேற்றன. அவற்றுடன் ரஷ்ய நாட்டு கப்பல்களும் பயிற்சியில் கலந்து கொண்டன.