போபால்: மத்தியப் பிரதேச மாநிலம், சித்தி மாவட்டத்தில் 54 பயணிகளை ஏற்றிக் கொண்டு நேற்று காலை பேருந்து ஒன்று சென்றது. பாட்னா அருகே பாலத்தின் மீது பேருந்து வந்தபோது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால், தாறுமாறாக ஓடிய பேருந்து பாலத்தின் மேலிருந்து கால்வாயில் கவிழ்ந்தது. போலீசாரும், மீட்புப் படையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இரண்டு கிரேன் மூலமாக பேருந்து கால்வாயில் இருந்து வெளியே எடுக்கப்பட்டது.