ஹிசாரக்: ஆஃப்கனிஸ்தானில் ராணுவம் நடத்திய அதிரடி தாக்குதல்களில் மறைவிடங்களில் பதுங்கியிருந்த 20 தாலிபன் தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர். ஆஃப்கனிஸ்தானில் அதிபர் அஷ்ரப் கானி தலைமையிலான அரசு தாலிபன் தீவிரவாத இயக்கத்திற்கு எதிராக தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்நிலையில், நங்கார்ஹர், லோகர் ஆகிய இரண்டு மாநிலங்களில் தீவிரவாதிகளின் மறைவிடங்களில் நேற்று ஆஃப்கன் படையினர் வான்வழி தாக்குதலில் ஈடுபட்டனர். ஹிசாரக், ஹேஜாத் ஆகிய இடங்களில் தீவிரவாதிகளின் பயிற்சி முகாம்கள் மற்றும் பதுங்குகுழிகளில் சரமாரியாக குண்டுகள் வீசப்பட்டன.