சிறு வணிகர்களுக்கு பயிற்சி முகாம்

உத்திரமேரூர்: உத்திரமேரூரில் தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறை சார்பில் சிறு வணிகர்களுக்கான பயிற்சி முகாம் நேற்று நடந்தது. நிகழ்ச்சியில் உணவு பாதுகாப்புத்துறை வட்ட அலுவலர் விமலவிநாயகம் வரவேற்றார். பரிக் ஷான் நிறுவன முதுநிலை மேலாளர் திவ்யா கலந்து கொண்டு உணவுப் பொருட்களில் கலப்படங்கள் கண்டறியும் வழிமுறைகள், கலப்பட பொருட்களால் ஏற்படும் தீமைகள், கலப்பட பொருள்களை விற்பனை செய்தால் எடுக்கப்படும் சட்ட ரிதியான நடவடிக்கைகள் குறித்து விளக்கி கூறினார். வணிகர்கள் மற்றும் உணவு பாதுகாப்புத்துறை நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: