பண்ருட்டி : பண்ருட்டியில், கும்பகோணம் சாலையில் உள்ள பெரியார் டெப்போ அருகில் குப்பை அள்ளுவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக குப்பைகள் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. இதேபோல் வட்டாட்சியர் அலுவலகம் பின்புறம் விவசாய பொருட்களை காயவைப்பது போல் குப்பைகளை தனித்தனியாக கொட்டி காய வைத்து வருகின்றனர். இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இந்த பகுதி அருகே ஏராளமான வீடுகள் உள்ளதால் துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதியினர் கூறுகின்றனர்.