சென்னை மாநகராட்சியில் 64,000 புதிய வாக்காளர்

சென்னை: தமிழகத்தில் வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான பிரசாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இதற்கிடையில் சட்டமன்ற தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் ஜனவரி மாதம் வெளியிடப்பட்டது. அதன்படி தமிழகத்தில் 6.26 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 18 வயது பூர்த்தியடைந்த முதல் தலைமுறை வாக்காளர்கள் 8,97,694 பேர். இதில், சென்னையில் மட்டும் மொத்தம் 64 ஆயிரத்து 152 புதிய வாக்காளர்கள் உள்ளனர். குறிப்பாக, ஆர்.கே.நகர் தொகுதியில் அதிகபட்சமாக 5,958 வாக்காளர்களும், குறைந்தபட்சமாக துறைமுகம் தொகுதியில் 2,770 வாக்காளர்களும் உள்ளனர்.

Related Stories: