கோவா: 7 வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி கோவாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று இரவு நடந்த 82வது லீக் போட்டியில் எப்.சி. கோவா-காவுகாத்தி அணிகள் மோதின. விறுவிறுப்பான இந்த போட்டியில், கோவா வீரர் ஜேசுராஜ் 21, அமர்ஜித்சிங் 80வது நிமிடத்தில் கோல் அடித்தனர். கவுகாத்தி தரப்பில் காலேகோ 41, மற்றும் 83வது நிமிடத்தில்கோல் அடித்தார். இதனால் போட்டி 2-2 என சமனில் முடிந்தது.15வது ஆட்டத்தில் ஆடிய இரு அணிகளுக்கும் இது 7வது டிராவாகும். இன்று இரவு 7.30 மணிக்கு பெங்களூரு எப்.சி- சென்னையின் எப்.சி அணிகள் மோதுகின்றன.