அரசாணை வெளியீடு மருத்துவ கல்லூரி மாணவர்கள் 58 நாள் போராட்டம் வாபஸ்

சிதம்பரம்: கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் அதிக கட்டணம் வசூல் எதிர்த்து மாணவர்கள் கடந்த ஆண்டு டிசம்பர் 9ம் தேதி போராட்டம் தொடங்கினர். இதையடுத்து உயர்கல்வித் துறையில் இருந்து மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை சுகாதாரத் துறைக்கு மாற்றி அரசு உத்தரவு பிறப்பித்தது. ஆனாலும் அரசு கட்டணமே வசூலிக்க உத்தரவிட கோரி போராட்டத்தை தொடர்ந்தனர். இந்நிலையில், நேற்று தமிழக அரசின் சுகாதாரத்துறை, ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் அரசு கல்லூரிகளைப் போலவே கட்டணம் வசூலிக்கப்படும் என அரசாணை வெளியிட்டது. இதையடுத்து மாணவர்கள் போராட்டப் பந்தலில் கை தட்டியும், பட்டாசு வெடித்தும் இந்த உத்தரவை வரவேற்று தங்கள் 58 நாள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.

Related Stories: