ஊட்டி: மசினகுடியில் சுற்றித்திரிந்த ரிவால்டோ யானையை தெப்பக்காடு முகாமிற்கு நடக்க வைத்து அழைத்து செல்லும் பணியில் வனத்துறையினர் 2ம் நாளாக ஈடுபட்டனர். நீலகிரி மாவட்டம் மசினகுடி அருேக உள்ள மாவனல்லா பகுதிகளில் உலா வந்த எஸ்.ஐ. என்ற காட்டு யானை மீது ரிசார்ட் உரிமையாளர்கள் தீப்பந்தத்தை வீசினர். இதில் காயம் அடைந்த அந்த யானை உயிரிழந்தது. இந்த நிலையில் வாழைத்தோட்டம், மசினகுடி, சீகூர் பாலம் உள்ளிட்ட பகுதிகளில் உலா வரும் மற்றொரு காட்டு யானையான ரிவால்டோவிற்கும் ரிசார்ட் உரிமையாளர்களால் அச்சுறுத்தல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து ரிவால்டோவை பாதுகாக்கும் நோக்கத்தில் அந்த யானையை யானையை தெப்பக்காடு முகாமுக்கு கொண்டு சென்று பராமரிக்க வனத்துறையினர் முடிவு செய்தனர். யானையின் தும்பிக்கை நுனியில் ஏற்பட்ட காயம் காரணமாக தும்பிக்கையில் உள்ள துளை மிகவும் சிறியதாக உள்ளது. இதனால் மயக்க ஊசி செலுத்தி யானையை பிடிக்கும் பட்சத்தில், மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டு வேறு பாதிப்பு ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக மயக்க ஊசி ெசலுத்தி பிடிக்காமல் நடத்தியே தெப்பக்காட்டுக்கு கொண்டு செல்லும் நடவடிக்கையை வனத்துறையினர் தொடங்கினர்.