பெங்களூரு: கொரோனா ஊரடங்கு தளர்வுக்கு பின் பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டது. இதற்கிடையே சினிமா திரையங்குகளில் 50 சதவீத இருக்கை மட்டுமே பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டது. இதை நூறு சதவீதமாக உயர்த்த வேண்டும் என்று சினிமா வர்த்தக சபையினர் கோரிக்கை வைத்தனர். இந்தநிலையில், சுகாதாரத்துறை அமைச்சர்கள் சுதாகர், சிசி பாட்டீல் தலைமையில் நேற்று மாலை வர்த்தக சபையினருடன் கூட்டம் நடந்தது.