பள்ளிப்பட்டு: ஆர்.கே.பேட்டையில் ஊராட்சி ஒன்றியம் நிதி நெருக்கடியால் வளர்ச்சி பணிகள் கடுமையாக முடக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய குழு சாதாரண கூட்டத்தில் கவுன்சிலர்கள் பரபரப்பு குற்றம் சாட்டினர். ஆர்.கே.பேட்டை ஊராட்சி ஒன்றிய குழு சாதாரண கூட்டம் நேற்று நடைபெற்றது. ஒன்றிய குழு தலைவர் ரஞ்சிதா ஆபாவாணன் தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் கலைச்செல்வி வரவேற்றார். கூட்டத்தில் திமுகவை சேர்ந்த உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். கூட்டம் தொடங்கியதும் வரவு, செலவு கணக்கு வாசிக்கப்பட்டது. அப்போது, ‘திமுக, அதிமுக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஓர் ஆண்டாக நிதி நெருக்கடியால் ஒன்றியத்தில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள முடியவில்லை.