மதுராந்தகம்: ஒருங்கிணைந்த மருத்துவ முறையை எதிர்த்து, கற்பக விநாயகா மருத்துவ கல்லூரி டாக்டர்கள், பயிற்சி டாக்டர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். மாநிலம் முழுவதும் ஒருங்கிணைந்த மருத்துவ முறையை எதிர்த்து, டாக்டர்கள் நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையொட்டி, செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே சின்னகொளம்பாக்கத்தில் உள்ள கற்பக விநாயகா மருத்துவ கல்லூரி வளாகத்தில், இந்திய மருத்துவர்கள் கூட்டமைப்பின் சார்பில், ஆயுர்வேதம் மற்றும் ஆங்கில மருத்துவத்தை இணைந்து கொண்டு வந்துள்ள, ஒருங்கிணைப்பு மருத்துவ முறையினை எதிர்த்து டாக்டர்கள், பயிற்சி டாக்டர்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.