பொள்ளாச்சி பாலியல் வழக்கு அதிமுக நிர்வாகி உள்பட 3 பேருக்கு காவல் நீட்டிப்பு

கோவை: பொள்ளாச்சி பாலியல் பலாத்கார வழக்கில் பொள்ளாச்சி நகர அதிமுக மாணவரணி முன்னாள் செயலாளர் அருளானந்தம் (34), ஹெரன் பால் (28), பாபு (29) ஆகியோர் ஜன.5ம் தேதி சி.பி.ஐ. போலீசாரால் கைது செய்யப்பட்டு கோபி சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில் அருளானந்தம், ஹெரன் பால், பாபு ஆகியோரின் நீதிமன்ற காவல் நேற்றுடன் முடிந்தது. இதைத்தொடர்ந்து இவர்கள் கோவை மகளிர் கோர்ட்டில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களுக்கு மேலும் 15 நாள் காவலை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: