அண்ணாவின் 52-வது நினைவு நாள்: தங்கவயலில் திமுக நினைவஞ்சலி

தங்கவயல்: திமுக நிறுவனரும், தமிழக முன்னாள் முதல்வருமான மறைந்த அறிஞர் அண்ணாவின் 52வது நினைவு நாளை தங்கவயல் திமுகவினர் அனுசரித்து  நினைவஞ்சலி செலுத்தினர். தங்கவயல் ராபர்ட்சன் பேட்டை பிரிச்சர்டு சாலையில் உள்ள திமுக அலுவலகத்தில்  நடந்த நினைவஞ்சலி நிகழ்ச்சியில் முன்னாள் நகர பொறுப்பாளர் த.கருணாநிதி தலைமை தாங்கி, அண்ணாவின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி பேசும் போது, உலகெங்கும் வாழும் தமிழர்களையும், தமிழையும் நேசித்தவர். கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற தாரக மந்திரத்தை இயக்கத்திற்கு உருவாக்கி தந்த பேரறிஞர் அண்ணா, திமுக கொள்கையில் மட்டுமின்றி தமிழர்களின் உள்ளங்களிலும் நிலைத்திருப்பார் என்றார். சேகரன், மணிவண்ணன், சவுந்தர், தர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தங்கவயல் மாரி குப்பம் எட்கர் 8வது வார்டு திமுக கிளை கழகம் சார்பில் அறிஞர் அண்ணாவின் நினைவு நாள் கிளை செயலர் சாரங்கபாணி தலைமையில், அண்ணாவின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் நித்தியானந்தன், உமாதேவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: