பெங்களூரு: பெங்களூருவில் சிறப்பு மிக்க லால்பாக் தாவிரவியல் பூங்காவில் பார்க்கிங் மற்றும் நுழைவுக் கட்டணத்தை தோட்டக்கலைத்துறை அதிகரித்துள்ளது. பெங்களூருவில் அமைந்துள்ள லால்பாக் தாவிரவியல் பூங்கா வரலாற்று சிறப்பு மிக்கது. ஆண்டு தோறும் குடியரசு தினம் மற்றும் சுதந்திர தினத்தை முன்னிட்டு இங்கு மலர் கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம். கண்காட்சியில் இடம் பெறும் அழகிய செடி மற்றும் பூக்களை காண லட்சக்கணக்காண மக்கள் கூட்டம் அலைமோதும். இந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக குடியரசு தின மலர்கண்காட்சி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. வேறுறொரு நாளில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது பூங்காவின் நுழைவு மற்றும் பார்க்கிங் கட்டணத்தை தோட்டக்கலைத்துறை அதிகரித்துள்ளது.