பாங்காக்: உலக டூர் பைனல்ஸ் பேட்மின்டன் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில், தைவான் வீராங்கனை டாய் ட்ஸூ யிங் சாம்பியன் பட்டம் வென்றார். பாங்காக்கில் நேற்று நடந்த இறுதிப் போட்டியில் ஸ்பெயினின் கரோலினா மரினுடன் மோதிய டாய் ட்ஸூ யிங் 14-21 என்ற கணக்கில் முதல் செட்டை இழந்து பின்தங்கினார். எனினும், அடுத்த செட்டில் அதிரடியாக விளையாடிய அவர் 21-8 என்ற கணக்கில் வென்று பதிலடி கொடுக்க சமநிலை ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, 3வது மற்றும் கடைசி செட் ஆட்டத்தில் அனல் பறந்தது.