ஜெனீவா: ‘காஷ்மீர் பிரச்னைக்கு பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காண வேண்டும். இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் மூண்டால் பேரழிவு ஏற்படும்,’ என்று ஐநா தெரிவித்துள்ளது. கடந்த 2019ம் ஆண்டு ஜம்மு காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பிறகு, இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது. இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் பிரச்னையை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முயற்சிக்கும்படி, இந்தியா - பாகிஸ்தான் நாடுகளை ஐநா வலியுறுத்தி உள்ளது. இதன் பொதுச் செயலாளர் ஆன்டனியோ கட்டரஸ் நேற்று கூறியதாவது: காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட போது இரு நாடுகளிடையேயான மோதல் பற்றி ஐநா கவலை தெரிவித்திருந்தது. துரதிர்ஷ்டவசமாக மீண்டும் அதே கருத்தை முன் வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.