டெல்லியில் புதிதாக 199 பேருக்கு கொரோனா

புதுடெல்லி: டெல்லியில் புதிதாக 199 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. டெல்லியில் கொரோனா பரிசோதனைகள் ஒரேநாளில் 57,993 பேருக்கு நடத்தப்பட்டது. இதில் 31,247 ஆர்டி பிசிஆர் சோதனைகள், 26,746 ரேபிட் ஆன்டிஜென் சோதனைகள் ஆகும். இதில் 199 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இது 0.34 சதவீதம் ஆகும். ஜனவரி மாதம் தொடங்கியதில் இருந்து இதுவரை 7வது முறையாக 200க்கும் கீழ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் தற்போது ஒட்டுமொத்தமாக 6,34,524 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று புதிதாக 6 பேர் பலியானதால் ஒட்டுமொத்த கொரோனா பலி எண்ணிக்கை 10,835ஐ எட்டியது. தற்போது கொரோனா ஆக்டிவ் நோயாளிகள் எண்ணிக்கை 1,501ல் இருந்து 1575 ஆக உயர்ந்தது.

Related Stories: