டெல்லி: மாநிலங்களவை தலைவராக செயல்பட்ட போது கூச்சல் குழப்பத்திற்கிடையில் மசோதாக்களை நிறைவேற்ற ஏன் அனுமதிக்கவில்லை என பிரதமர் நரேந்திர மோடி தம்மை கேள்வி கேட்டதாக முன்னாள் குடியரசு துணை தலைவர் ஹமீத் அன்சாரி தெரிவித்துள்ளார். BY MANY A HAPPY ACCIDENT என்ற புத்தகத்தை ஹமீத் அன்சாரி எழுதியுள்ளார். அதில் ஒரு நாள் எந்தஒரு அறிவிப்பும் இல்லாமல் பிரதமர் தனது அலுவலகத்துக்கு வந்ததாக ஹமீத் அன்சாரி குறிப்பிட்டுள்ளார்.