புதுடெல்லி: கொரோனா தொற்று காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த அறுவை சிகிச்சை மற்றும் பிற மருத்துவ சேவைகள் அனைத்தையும் டெல்லி அரசு மருத்துவமனைகளில் தொடங்க உத்தரவிடப்பட்டுள்ளது. டெல்லியில் கொரோனா தொற்று அதிவேகமாக பரவியதால் மாநில அரசு சிறப்பு நடவடிக்கை எடுத்து முக்கியமான அரசு மருத்துவமனைகளை கொரோனா சிறப்பு சிகிச்சை மையமாக மாற்றியது. இதனால் புறநோயாளிகள் பிரிவு உள்பட பல்வேறு சேவைகள் நிறுத்தப்பட்டன. தற்போது தொற்று பரவுவது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அனைத்து மருத்துவமனைகளிலும் புறநோயாளிகள் சிகிச்சை பிரிவு செயல்பட டெல்லி அரசு அனுமதி வழங்கியது. மேலும் அறுவை சிகிச்சை,பிற மருத்துவ சேவைகளை தொடங்கவும் டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது.