ஜம்மு: பாகிஸ்தானில் இருந்து தீவிரவாதிகளை ஊடுருவச் செய்வதற்காக ஜம்மு எல்லையில் மேலும் அமைக்கப்பட்டுள்ள மேலும் ஒரு சுரங்கப் பாதையை எல்லை பாதுகாப்பு படையினர் கண்டுபிடித்துள்ளனர். ஜம்மு காஷ்மீர் எல்லையில் இந்திய ராணுவம் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருப்பதால், சுரங்கம் அமைத்து தீவிரவாதிகள் ஊடுருவ முயன்று வருகிறார்கள். இதனால், சுரங்கப்பாதைகளை கண்டறிந்து அழிப்பதற்கான பணிகளில் ராணுவம் தனி கவனம் செலுத்தி வருகிறது. கதுவா மாவட்டத்திலுள்ள ஹிரா நகர் செக்டார் பகுதியில், கடந்த ஜனவரி 13ம் தேதியன்று சுரங்கப்பாதை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இது, பாபியன் கிராமத்தில் இருந்து பாகிஸ்தானின் சாகர்கர் பகுதியில் சென்று முடிந்தது. இதனால், இப்பகுதியில் தீவிர சோதனையில் பாதுகாப்பு படை ஈடுபட்டிருந்தது. தொடர் தேடுதல் வேட்டையில் நேற்று மீண்டும் ஒரு சுரங்கப்பாதை கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.