கொடைக்கானல்: கொடைக்கானலில் வருடத்திற்கு ஒரு முறை பூக்கும் ஆர்னமென்டல் செர்ரி மலர்கள் பூத்துள்ளதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் ஆண்டுக்கு ஒரு முறை மரத்தில் பூக்கும் ஆர்னமென்டல் செர்ரி மலர்கள் பூக்கத் துவங்கியது. ஜனவரி மாதம் பூக்க துவங்கும் இந்த மலர்கள் பிப்ரவரி, மார்ச் மாதங்கள் வரை நீடிக்கும். இளம் சிவப்பு நிறத்தில் பூக்கும் இந்த மலர்கள் மரத்தில் பூக்கும் நேரத்தில் அழகாக காட்சி அளிக்கும்.