சென்னை: திருப்போரூர் ஒன்றியத்தில், நாடாளுமன்ற எம்பிக்கள் குழு ஆய்வு செய்தனர். அப்போது ஏற்பட்ட பல்வேறு குளறுபடிகளால், துணை பிடிஓ உள்பட 3 பேரை, கலெக்டர் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். மத்திய அரசின் சார்பில் நிதி வழங்கப்பட்டு மாநில அரசின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து நாடாளுமன்ற நிலைக்குழு தலைவர் பிரதாப் ராவ் ஜாதவ் தலைமையில் 18 எம்.பி.க்கள் அடங்கிய குழுவினர் கடந்த 17,18 தேதிகளில் திருப்போரூர் ஒன்றியத்தில் ஆய்வு மேற்கொண்டனர். மேலையூர் ஊராட்சியில் தனி நபர் கழிப்பறை திட்டத்தில் கட்டப்பட்ட ஒரு வீட்டின் கழிப்பறையை காட்ட முடியுமா என நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேட்டனர். இதையடுத்து அருகே இருந்த ஒரு வீட்டின் கழிப்பறைக்கு அதிகாரிகள் அழைத்துச் சென்றனர். அங்கு, புதிய கழிப்பறை இல்லை. இதனால் ஆத்திரமடைந்த குழுவினர் பழைய கழிப்பறையை காட்டி எங்களை ஏமாற்றுகிறீர்களா, பிரதமர் தனிநபர் கழிப்பறை திட்டத்தில் கட்டப்பட்ட கழிப்பறை எங்கே என கேட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட வீடுகளை காட்டுமாறு கேட்டனர்.