பெங்களூரு: இந்தியாவின் முதல் உள்நாட்டு 9 மிமீ மெஷின் பிஸ்டலை ராணுவ ஆராய்ச்சி மற்றும்மேம்பாட்டு அமைப்பு உருவாக்கியுள்ளது. காலாட்படை பள்ளி மற்றும் டிஆர்டிஓவின் ஆயுத ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஸ்தாபனம் (ARDE, புனே ஆகியவை இணைந்து இந்த ஆயுதத்தை உருவாகியுள்ளது. நான்கே மாதத்தில் இந்த ஆயுதம் உள்நாட்டு தொழில் நுட்பத்தை பயன்படுத்தி சிறப்பாக தயாரிக்கப்பட்டுள்ளது. பிஸ்டல் இன்-சர்வீஸ் 9 மிமீ வெடிமருந்துகளை இதில் பயன்படுத்த முடியும். விமான தர அலுமினியத்திலிருந்து தயாரிக்கப்பட்ட மேல் ரிசீவர் மற்றும் கார்பன் ஃபைபரை பயன்படுத்தி உலோக 3D அச்சிடுதல் என்ற நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தி இது தயாராகியுள்ளது.