திருவனந்தபுரம்: கேரள அரசின் கிறிஸ்துமஸ், புத்தாண்டு பம்பர் லாட்டரியின் முதல் பரிசு ரூ.12 கோடி நெல்லை மாவட்ட எல்லையான ஆரியங்காவில் விற்பனையாகி உள்ளது. எனவே இந்த பரிசுக்கான அதிர்ஷ்டசாலி தமிழகத்தை சேர்ந்தவராக இருக்கலாம் என கருதப்படுகிறது. ேகரள அரசின் கிறிஸ்துமஸ், புத்தாண்டு பம்பர் லாட்டரியின் முதல் பரிசு ரூ.12 கோடி அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இதற்கான டிக்கெட் விற்பனை தொடங்கியது. இந்த நிலையில் நேற்று இதற்கான குலுக்கல் மேயர் ஆரியா ராஜேந்திரன் தலைமையில் நடந்தது. இதில் முதல் பரிசு ரூ.12 கோடி ‘எக்ஸ்ஜி 358753’ என்ற எண்ணுள்ள டிக்கெட்டுக்கு கிடைத்துள்ளது.