சேலம்: தமிழக உயர்கல்வித்துறையின் கீழ் 130க்கும் மேற்பட்ட அரசு கலை அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இக்கல்லூரிகளில் பேராசிரியர், அலுவலக பணியாளர்கள் மற்றும் இதர பணியாளர்கள் என ஆயிரக்கணக்கான பணியிடங்கள் காலியாக உள்ளன. மேலும், பல கல்லூரிகள் மற்றும் கல்லூரி கல்வி இயக்கக மண்டல அலுவலகங்களில், எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாத நிலை காணப்படுகிறது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் பலமுறை புகாராக, கோரிக்கையாக தெரிவித்தும் கண்டுகொள்ளப்படவில்ைல. இதுபற்றி அவர்கள் வாட்ஸ்அப் குழுக்களில் அந்த குறைபாடுகளை பதிவேற்றம் செய்து, தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வந்தனர். இதனால் உயர்கல்வித்துறைக்கு சிக்கல் ஏற்பட்டது.