ஒடுகத்தூர்: ஒடுகத்தூரில் 10 ஆண்டுகளாக போலி டாக்டர் நடத்தி வந்த கிளினிக்கிற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுகா ஒடுகத்தூர் கிடங்கு தெருவைச் சேர்ந்தவர் ரமேஷ்(40). இவர் ஒடுகத்தூரில் கடந்த 10 ஆண்டுகளாக கிளினிக் வைத்து நடத்தி வந்தார். இங்கு காய்ச்சல் உள்ளிட்ட நோய்களுக்கு சிகிச்சையும், பல்வேறு நோய்களுக்கு அறுவை சிகிச்சையும் செய்துள்ளார். ஆனால் ரமேஷ் முறையாக மருத்துவம் படிக்காமல் சிகிச்சை அளித்து வந்தார்.இதுகுறித்து கலெக்டர் சண்முகசுந்தரத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதுதொடர்பாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு, கலெக்டர் உத்தரவிட்டார்.