கொல்கத்தா:மேற்குவங்கத்தில் மத உணர்வுகளை புண்படுத்தியதாக திரிணாமுல் காங்கிரஸ் எம்பி கல்யாண் பானர்ஜி மீது போலீஸ் வழக்குபதிவு செய்துள்ளனர். மேற்குவங்க மாநிலம் ஹவுரா மாவட்டத்தில் நடந்த பேரணியில் திரிணாமுல் காங்கிரஸ் எம்பி கல்யாண் பானர்ஜி பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில், உத்தரப்பிரதேசத்தில் நடந்த ஹத்ராஸ் சம்பவம் தொடர்பாக ஆளும் பாஜக அரசை குறிவைத்து குறிப்பிட மதக் கடவுள்களை குறிப்பிட்டு கொச்சையாக பேசியதாக கூறப்படுகிறது. இவரது பேச்சு தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது. மேலும், இவரது பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.