தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் அறுவடைக்கு தயாராக உள்ள சம்பா வயல்களில் மழை நீர் தேங்கியுள்ளது. இதனால் பயிர்கள் சாய்ந்து சேதம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் தஞ்சை அருகே அம்மாபேட்டை ஒன்றியத்தில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் அறுவடைக்கு தயாராக உள்ள நெற்கதிர்கள் தற்போது பெய்து வரும் தொடர் மழையால் நீரில் மூழ்கி, அழுகி முளைத்துள்ளது. இதனால் விவசாயிகள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். பாதிக்கப்பட்ட பயிர்களை பார்வையிட இதுவரை அரசு அதிகாரிகள் யாரும் வரவில்லை.