செய்யூர்: சூனாம்பேடு அரசு பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா நேற்று கொண்டாடப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டம் சூனாம்பேட்டில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பள்ளிகளில் கடந்த 1970 முதல் 1990ம் ஆண்டு வரையில் படித்த முன்னாள் மாணவர்கள் பேரவை சார்பில் சமத்துவ பொங்கல் விழா நேற்று கொண்டாடப்பட்டது. பள்ளி வளாகத்தில் நடந்த இந்நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர் பேரவை ஒருங்கிணைப்பாளர் விடுதலை செழியன் தலைமை தாங்கினார். பேரவை தலைவர் கோபுராஜ் முன்னிலை வகித்தார். சித்தாமூர் வட்டார கல்வி அலுவலர் பழனிவேல்ராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.