திருவனந்தபுரம்: கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரக பார்சல் மூலம் தங்கம் கடத்திய சொப்னா தலைமையிலான கும்பல், இந்தியாவில் முறைகேடாக சம்பாதிக்கும் பணத்தை டாலர்களாக மாற்றி வெளிநாட்டுக்கு கடத்தியதும் விசாரணையில் தெரியவந்தது. இந்த டாலர் கடத்தலில் கேரள சபாநாயகர் ராமகிருஷ்ணனுக்கும் தொடர்பு உள்ளதாக கருதப்படுகிறது. இதுபற்றி சபாநாயகர் ராமகிருஷ்ணனின் உதவி தனிச்செயலாளர் ஐயப்பனிடம் விசாரணை நடத்த சுங்க இலாகா முடிவு செய்து, 3 முறை அவரது அலுவலகத்தில் நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. ஆனால், சட்டசபை கூட்டத் தொடரால் விசாரணைக்கு ஆஜராக முடியாது என ஐயப்பன் கூறினார்.