லடாக் எல்லையில் சீனச் சிப்பாய் கைது: பாங்காங் ஏரியில் நடமாடியபோது இந்திய ராணுவம் சுற்றி வளைத்தது..!!

டெல்லி: எல்லையில் சீனச் சிப்பாய் கைது செய்யப்பட்டுள்ளார். பாங்காங் ஏரியின் தெற்கு பகுதியில் வெள்ளிக்கிழமை காலை சீன சிப்பாய் நடமாடியபோது இந்திய ராணுவம் சுற்றி வளைத்தது. சீனாவின் மக்கள் விடுதலை ராணுவத்தை சேர்ந்த சிப்பாய் கிழக்கு லடாக் எல்லையை கடக்க முயன்றபோது கைது செய்யப்பட்டார். சுமர் - டெம்சாக் பகுதி வழியாக வந்ததாகவும், தனது பெயர் வாங் யா லாங் என்று கூறியதாகவும் இந்திய ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: