கூடலூர்: கூடலூரை அடுத்துள்ள பாடந்துறை பகுதியைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் விவசாயி. இவர் தனது தோட்டத்தில் நேந்திரன் வாழை பயிரிட்டு உள்ளார். நேற்று முன்தினம் இரவு இவரது தோட்டத்திற்குள் புகுந்த ஒற்றை யானை வாழை மரங்களை தின்றும், மிதித்தும் சேதப்படுத்தியது. இதையறிந்த விவசாயிகள் யானையை விடிய விடிய விரட்ட முயன்றும் முடியவில்லை. இந்நிலையில் நேற்று அதிகாலையில் அங்கிருந்து வனப்பகுதிக்குள் சென்றது. சுமார் 400க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் காட்டு யானயால் சேதப்படுத்தப்பட்டது.