90ஸ் கிட்ஸை வெறுப்பேற்றும் 2கே கிட்ஸ் ஒரே மேடையில் 2 காதலிகளை மணந்த வாலிபர்

பாஸ்தர்: பொதுவாகவே 90ஸ் கிட்ஸ்களுக்கு திருமணமாவது குதிரை கொம்பாக இருப்பதாக சமூக வலைதளங்களில் பலவாறு கிண்டல் செய்யப்படுகிறது. அதுவே, 2கே கிட்ஸ்கள்  காதல், கல்யாணம் என இளம் வயதிலேயே எல்லா சந்தோஷத்தையும் அனுபவிப்பதாக மீம்ஸ்கள் வருகின்றன. இப்படிப்பட்ட நிலையில், 90ஸ் கிட்ஸ்களை மேலும் வெறுப்பேற்றும் வகையில் சட்டீஸ்கரில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. இங்குள்ள  பாஸ்தர் மாவட்டம், திகாரா லோங்கா கிராமத்தை சேர்ந்தவர் சாந்து மவுரியா (25). கடந்த 3ம் தேதி ஒரே மேடையில் 2 பெண்களை அவர் திருமணம் செய்து கொண்டார். ஹசினா, சுந்தரி என 2 பெண்கள் மவுரியாவை காதலித்தனர். இருவரும் அவரை பிரிய மறுத்து விட்டதால், காதலிகள் சம்மதத்துடன் ஒரே மேடையில் தாலி கட்டி மணந்து கொண்டுள்ளார். இதைவிட கொடுமை இந்த திருமணம் ஊரார் மத்தியில் நடந்துள்ளது. மணப்பெண்களில் சுந்தரிக்கு வயசு 21, ஹசினாவுக்கு வயது 19. பிளஸ் 2 முடித்துள்ளனர்.

இந்து திருமண சட்டப்படி இதுபோன்ற திருமணம் குற்றமாகும். ஆனாலும், ஒருவர் கூட இதைப் பற்றி புகார் கூறவில்லை. இப்போது சமூக வலைதளத்தில் இவர்கள் மூவரும் அக்னி சாட்சியாக வலம் வந்து திருமணம் செய்து கொள்ளும் காட்சிகள் வைரலாகி உள்ளன.

Related Stories: