தமிழகத்தில் 790 பேருக்கு கொரோனா

சென்னை: தமிழகத்தில் புதிதாக நேற்று 790 பேருக்கு கொரோனா ெதாற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் நேற்று 64,231 சோதனைகள் செய்யப்பட்டதில் 790 பேருக்கு கொரோனா உறுதியானது. இதைச் சேர்த்து தமிழகத்தில் 8,24,776 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  நேற்று மட்டும் 897 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது வரை 8,05,136 பேர் குணமடைந்துள்ளனர். 7,432 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று மட்டும் 8 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

Related Stories: