சிட்னி: ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மெக்ராத். இவரது மனைவி ஜேன் மார்பக புற்றுநோயால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் காலமானார். இதையடுத்து மறைந்த மனைவி ஜேன் பெயரில் மெக்ராத் அறக்கட்டளை நடத்தி வருகிறார். இதற்கு உதவிடும் வகையில் இந்தியா-ஆஸ்திரேலியா இடையே சிட்னியில் நடந்து வரும் 3வது டெஸ்ட் பிங்க் டெஸ்டாக நடந்து வருகிறது. கொரோனா காரணமாக மைதானத்தில் 25 சதவீதம் ரசிகர்களுக்கு மட்டுமே அனுமதி அளித்துள்ளதால் டிஜிட்டல் முறையில் தனது அறக்கட்டளைக்கு மெக்ராத் நிதி திரட்டி வருகிறார். இணைய தளத்தின் வழியாக ரசிகர்கள் நன்கொடைகளை செலுத்தலாம்.